பெற்றோருக்கு பேருபகாரம் புரிவோம் =*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*= எமக்கு நண்பர்கள், அயல் வீட்டார்கள், அரசியல் வாதிகள், வியாபாரப் பங்குதாரர்கள் என பலர்களுடனும் தொடர்புண்டு. ஆயினும் இவர்களது தொடர்புகளும் நட்புகளும் எவ்வளவு காலம் நீடிக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஏனெனில் இன்று வரை நண்பனாக இருந்தவன் நாளை பரம விரோதியாகி விடுகின்றான். இன்று வரை அயலில் வசித்தவன் நாளை உலகின் வேறோர் திசையில் சென்று வசிக்க ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை ஒரு அரசியல் கட்சியில் இருந்தவன் நாளை எதிர் கட்சிக்கு தாவி விடுகின்றான். இன்று வரை வியாபாரப் பங்குதாரராக இருந்தவன் நாளை மோசடிக் காரணாக ஆகிவிடுகின்றான். இன்னுமொரு உறவு இருக்கின்றது அதனை நாம் பிரிய நினைத்தாலும் பிரிய முடியாது. அதுதான் எம்மைப் பெற்றவர்களின் உறவும் தொடர்பும். பெற்றவர்கள் இனைவைப்பாளர்களாக இருப்பினும் அவர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் ஆதரவாகவும் அரவனைப்பாகவும் நடக்குமாறு இஸ்லாம் வழிகாட்டுகின்றது. • பெற்றோருக்கு உபகாரம் புரிவோருக்கு கிடைக்கும் நன்மைகள்: 1. ஹஜ், உம்ரா, அரப்போர் புரிந்த நன்மை கிடைக்க...